இத்தாலியில் இருந்து ஹஷிஷ் போதைப்பொருள் கடத்தல்

இத்தாலியில் இருந்து ஹஷிஷ் போதைப்பொருள் கடத்தல்: மூவர் கைது

by Staff Writer 01-03-2019 | 4:00 PM
Colombo (News 1st) இத்தாலியில் இருந்து விமானம் ஊடாகக் கடத்தப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மின் உபகரணங்களில் மறைத்து பொதிச்சேவையூடாக போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 600 கிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நபர்களின் பெயர்களுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சி பெட்டியொன்றும் 05 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.