அர்ஜூன மகேந்திரனை உடனடியாக நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல்

by Bella Dalima 01-03-2019 | 8:53 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை உடனடியாக நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தினார். அர்ஜூன மகேந்திரனை அறிமுகப்படுத்தி, நியமித்த காரணத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது பழி விழுந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். தனது நண்பருக்காகவாவது அவர் இலங்கைக்கு வர வேண்டும் எனவும் தான் சுற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ''மொழிகளைக் கற்போம் மனதை வெல்வோம்'' எனும் தொனிப்பொருளிலான பயிற்சிப்பாசறையின் போதே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.