தென் மாகாண சபை உறுப்பினர் கிருஷாந்த புஷ்பகுமார கைது

by Staff Writer 28-02-2019 | 11:08 AM
Colombo (News 1st) சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென் மாகாண சபையின் உறுப்பினர் கிருஷாந்த புஷ்பகுமார கைது செய்யப்பட்டுள்ளார். தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, அக்மீமன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய தென் மாகாண சபையின் உறுப்பினர் கிருஷாந்த புஷ்பகுமார கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்