சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கைது

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கைது

by Staff Writer 28-02-2019 | 9:51 AM
Colombo (News 1st) நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி - தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்