கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

by Staff Writer 28-02-2019 | 1:49 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு - 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு - கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்