86 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வடக்கு கடற்பரப்பில் 86 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

by Staff Writer 27-02-2019 | 8:22 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் 86 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரளக்கஞ்சா கடற்படையினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பிலிருந்து 442 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரளக்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. எதிர்காலத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.