முறிகள் மோசடி: சட்ட நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

முறிகள் மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 27-02-2019 | 4:08 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக தெரிவிக்கப்பட்ட விடயத்தை நாட்டிற்கு அம்பலப்படுத்தி, சட்டத்தை அமுல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.