மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல்

மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 27-02-2019 | 7:36 PM
Colombo (News 1st) மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு சென்ற இருவர் நீதிபதியை சந்திக்க வேண்டுமென பதிவாளரிடம் கோரியுள்ளனர். நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாவலருடன் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குறித்த இருவரும் உரையாடியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்ற பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.