போலி கடனட்டைகளைப் பயன்படுத்திய மூவர் கைது

போலி கடனட்டைகளின் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த மூவர் கைது

by Staff Writer 27-02-2019 | 11:25 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில், போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், தம்புள்ளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்த வெவ்வேறு வங்கிகளின் 13 வீசா அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர்ளுக்கு எதிராக மாரவில, கண்டி, மாத்தறை, காலி, மத்துகம, தம்புள்ளை மற்றும் குளியாப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலாபத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். சந்தேகநபர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.