விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு அபராதம்

திருகோணமலையில் விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு 75,000 ரூபா அபராதம்

by Staff Writer 27-02-2019 | 4:33 PM
Colombo (News 1st) திருகோணமலை - உப்புவௌி பகுதியில் உள்ள வீடொன்றில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதன்போது, சந்தேகநபரான பெண்ணுக்கு நீதவான் 75,000 ரூபா அபராதம் விதித்தார். திருகோணமலை - வில்கம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27 ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.