ஜனாதிபதி கொலை சதி முயற்சி: இந்திய பிரஜை விடுவிப்பு

ஜனாதிபதி கொலை சதி முயற்சி: இந்திய பிரஜை மேர்சிலி தோமஸ் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

by Staff Writer 27-02-2019 | 9:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கொலை சதி முயற்சி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரமுகர் கொலை சதி முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சிலி தோமஸ் என்பவர் இன்று குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீசா இன்றி தங்கியிருந்தமையினால் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய செய்திகள்