SLTB இன் தலைவராக உபாலி மாரசிங்க நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமனம்

by Staff Writer 27-02-2019 | 7:59 AM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாகியான உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உபாலி மாரசிங்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். உபாலி மாரசிங்க இதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.