by Chandrasekaram Chandravadani 27-02-2019 | 12:53 PM
Colombo (News 1st) இந்தியாவின் 2 ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இவற்றுள் ஒரு விமானம் பாகிஸ்தான் நிலப்பரப்புக்குள் வீழ்ந்ததாகவும் குறித்த விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது தொடர்பில் இந்திய தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, பாகிஸ்தானின் வான் பரப்புக்குட்பட்ட பகுதிகளில் இருநாட்டு எல்லைக்கிடையே பாகிஸ்தான் வான் தாக்குதல்களை நடத்தியதாக, பாகிஸ்தானிய வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்கள் இந்திய விமானப்படையால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலாக நடத்தப்படவில்லை எனவும் இந்திய இராணுவத்தை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானிய வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.