ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரணதண்டனை

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரணதண்டனை

by Staff Writer 26-02-2019 | 1:54 PM
Colombo (News 1st) ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (26) மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார். 2017 டிசம்பர் 11 ஆம் திகதி, கொழும்பு - 14 எச்.ஆர். ஜோதிபால மாவத்தையில் 105 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.