மாணவி துஷ்பிரயோகம்: அதிபர் கைது

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் அதிபர் கைது

by Staff Writer 26-02-2019 | 9:51 AM
Colombo (News 1st) குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதான குறித்த மாணவி, பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து, பாடசாலை மாணவி, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரான அதிபர் இன்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்