மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

by Staff Writer 26-02-2019 | 7:09 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான வழக்கு நாளை (27) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையால் வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் இ.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பீட்டா அனலைசிங் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கை கடந்த 15 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. கார்பன் பரிசோதனைக்காக வழங்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகளின் அறிக்கையே கிடைக்கப்பெற்றுள்ளது.