சிகரெட் மதுபானத்திற்கு ஊக்கமளித்தால் சட்டநடவடிக்கை

சிகரெட், மதுபான பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 26-02-2019 | 4:19 PM
Colombo (News 1st) சிகரெட், மதுபானம் ஆகியவற்றின் பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். சிகரெட், மதுபானம் ஆகியவற்றின் பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் சில தொலைக்காட்சி நாடகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சட்ட மா அதிபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அவ்வாறான ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.