நெல்லை களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலைகள் தயார்

நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகள் தயார்

by Staff Writer 25-02-2019 | 7:18 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான களஞ்சியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமது களஞ்சியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது. பெரும்போக செய்கையில் இதுவரை 1,752 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மொத்தமாக 1,50,000 தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையிலும் குறைவான விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அவர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.