படைத்தளம் ஒகினாவாவுக்கு மாற்றம்: ஷின்ஸோ அபே

அமெரிக்க படைத்தளத்தை ஒகினாவா தீவுக்கு மாற்றுவது தொடர்பில் ஜப்பானிய பிரதமர்

by Staff Writer 25-02-2019 | 8:44 PM
Colombo (News 1st) ஜப்பானின் ஒகினாவா (Okinawa) தீவிற்கு அமெரிக்க படைத்தளத்தை மாற்றும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என, ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) தெரிவித்துள்ளார். படைத்தளத்தை மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டபோதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிணைப்பு அல்லாமல் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், 72 வீதமான வாக்காளர்கள் இந்த நடவடிக்கையினை எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒகினாவா தீவு அமெரிக்க இராணுவ வசதிகளின் பெரும்பகுதியை ஜப்பானுக்கு வழங்கி வருகின்றது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்றுவரும், விபத்துக்கள் மற்றும் குற்றச் செயல்கள், உள்நாட்டு மக்களிடம் குறித்த இராணுவத்தளம் தொடர்பிலான எதிர்ப்பினைத் தோற்றுவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த வாக்கெடுப்பு முடிவுகளை ஜப்பான் அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளுகின்ற போதிலும், 20 ஆண்டுகள் பழைமையான, அமெரிக்க இராணுவத்தளத்தை வேறிடத்துக்கு மாற்றும் திட்டத்தைத் தாமதப்படுத்த முடியாதென ஷின்ஸோ அபே குறிப்பிட்டுள்ளார்.