மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்பவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் நபர் ஹட்டனில் கைது

by Staff Writer 23-02-2019 | 4:57 PM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் நபர் ஒருவர் ஹட்டன் - காமினிபுர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து புகையிலையில் தயாரிக்கப்பட்ட 7 கிலோ 500 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நபர் மிக சூட்சுமமாக வர்த்தகர்கள் ஊடாக குறித்த போதைப்பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 46 வயதான சந்தேகநபர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.