பன்னிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

பன்னிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி:  3 பொலிஸ் குழுக்கள் விசாரணை 

by Staff Writer 23-02-2019 | 3:36 PM
Colombo (News 1st) பன்னிப்பிட்டிய - தெபானம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மனோஜ் சுதர்ஷன எனும் 35 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். சம்பவ இடத்தில் இரண்டு வெற்றுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். நீதவான் விசாரணையைத் தொடர்ந்து சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.