படைப்புழுவால் அழிவடைந்த செய்கைகளுக்கு இழப்பீடு

படைப்புழுவால் அழிவடைந்த செய்கைகளுக்காக 10 ஆம் திகதி முதல் இழப்பீடு

by Staff Writer 23-02-2019 | 5:26 PM
Colombo (News 1st) படைப்புழுவினால் அழிவடைந்த செய்கைகளுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. படைப்புழுவினால் சுமார் 12,000 ஏக்கர் செய்கை நிலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ருவன்சந்திர குறிப்பிட்டார். பகுதியளவில் மேலும் சில ஏக்கர் செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.