பொலிஸ் காவலரணில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

பக்கமுன பொலிஸ் காவலரணில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 23-02-2019 | 4:15 PM
Colombo (News 1st) பக்கமுன - தியபெதும பொலிஸ் காவலரணில் வைத்து பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மோதல் தொடர்பில் இரு தரப்பினர் பொலிஸ் காவலரணுக்கு வருகை தந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஒருவர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு விஜேராம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் காயமடைந்துள்ள நிலையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.