by Staff Writer 22-02-2019 | 3:49 PM
Colombo (News 1st) நாட்டிலிருந்து 2 கிலோ 94 கிராம் கஞ்சாவைக் கொண்டு செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா தொகையை துபாய்க்கு கொண்டு செல்ல தயாராகவிருந்த போதே, அப்பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.
இதன்பெறுமதி 8,37,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கஞ்சாவை தனது பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாகவும் சுங்க பதில் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கண்டி - அக்குரணை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.