ஏப்ரலில் விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் செய்மதி

ஏப்ரலில் விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் முதல் செய்மதி 

by Staff Writer 22-02-2019 | 3:32 PM
Colombo (News 1st) இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதியை ஏப்ரல் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இராவணா-1 என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த செய்மதி, அளவில் சிறியதென ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இதனை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.