மனித உரிமைகள் தொடர்பில் பேசும் நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை யார் ஆராய்வது?

by Staff Writer 21-02-2019 | 8:27 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபை அமர்வில் இன்று பிற்பகல் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவை மற்றும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வௌியிட்டார். 19 ஆவது திருத்தம் என்ற தூய்மையான பிள்ளை இன்று துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பில் பேசும் நாடுகளில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யார் ஆராய்ந்து பார்ப்பது எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய உரையை காணொளியில் காண்க...