போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் பெயர் விபரங்கள் குறித்து சபாநாயகர்

by Staff Writer 21-02-2019 | 1:41 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (21) சபையில் தெரிவித்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இதேவேளை, 25 அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அரச கணக்காய்வுக் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச கணக்காய்வுக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.