பொலிஸ்மா அதிபரின் குரல்பதிவு மாதிரி சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல்பதிவு மாதிரி அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 21-02-2019 | 7:32 AM
Colombo (News 1st) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல்பதிவு மாதிரியின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் குறித்த அறிக்கையை மன்றில் சமர்ப்பித்ததாக, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதற்தடவையாக அரச பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜராகியிருந்தார். பிரமுகர் கொலை சதிமுயற்சி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபரின் குரல்பதிவு மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகியிருந்தார். ஊழலுக்கு எதிரான அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் இந்தக் குற்றச்சாட்டு தெடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி உரையாடலில் பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ்மா அதிபர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகி குரல்பதிவை வழங்கியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.