கெசல்வத்தே தினுக்கவின் மாமனார் அல ரஞ்சி கைது

கெசல்வத்தே தினுக்கவின் மாமனார் அல ரஞ்சி கைது

by Staff Writer 21-02-2019 | 3:56 PM
Colombo (News 1st) கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் 'கெசல்வத்தே தினுக்க'-வின் மாமனாரான 'அல ரஞ்சி' என அழைக்கப்படும் ரஞ்சித் திலகரட்ன கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - வாழைத்தோட்டத்திலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றுக்கு அருகாமையில் விசேட அதிரடிப்படையினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரிடமிருந்து ஹெரோயினும் இரண்டு கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.