வெடிகந்தே கசுனை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தல்

வெடிகந்தே கசுனை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை

by Staff Writer 20-02-2019 | 8:02 AM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷின் உதவியாளரான 'வெடிகந்தே கசுன்' என அழைக்கப்படும் கசுன் தனஞ்சனவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இந்த அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால், கிரிபத்கொட பகுதியில் சந்தேகநபர் நேற்று (19) கைது செய்யப்பட்டார். குறித்த நபர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்து மஹரகம பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மாணிக்கக்கல் மற்றும் இரத்தினக்கற்களை கொள்ளையிட்டுள்ளார். இதன்போது, மாணிக்கக்கற்களை கொள்வனவு செய்ய வருகைதந்த வௌிநாட்டவரை, கைவிலங்கிட்டு அழைத்துச் சென்று மஹரகம பகுதியில் வைத்து விடுவித்தமை தொடர்பிலும் சந்தேகநபர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் வெடிக்கந்த பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவராவார்.