தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் 9 பேர் கைது

துபாயில் இருந்து தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் நாட்டிற்கு வருகை தந்த 9 பேர் கைது

by Staff Writer 20-02-2019 | 3:26 PM
Colombo (News 1st) ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் சுமார் ஒரு ​கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்காபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர். சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.