இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

by Staff Writer 20-02-2019 | 8:24 PM
Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று நடைபெற்றது. 2019 - 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோர் இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.