by Staff Writer 20-02-2019 | 11:44 AM
Colombo (News 1st) நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw Machines) பதிவுசெய்யும் நடவடிக்கை இன்று (20) ஆரம்பமாகி எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உத்தரவிற்கமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அரசதுறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுடன், தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திர வாள்களும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.