by Staff Writer 20-02-2019 | 5:54 PM
Colombo (News 1st) அம்பாறை - கண்டி வீதியை மறித்து பதியத்தலாவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அமைதியற்ற வகையில் செயற்பட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் ஏற்றிய லொறிகள் தமது கிராமத்தினூடாக பயணிப்பதை தடுக்குமாறு கோரி அம்பாறை - கண்டி பிரதான வீதியை பதியத்தலாவ பகுதியில் மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் அமர்ந்து குறிப்பிட்ட நேரம் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததால், அவர்கள் வீதியில் இருந்து வௌியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.