by Staff Writer 19-02-2019 | 8:05 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் எவரேனும் பாராளுமன்றத்தில் இருப்பார்களாயின், அவர்கள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு நேற்று (18) அறிவித்திருந்த போதிலும், தொலைபேசியூடாக அறிவிக்காமல் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் சிரேஸ்ட ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறு எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெறும் பட்சத்தில், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.