ஏப்ரல் மாதம் முதல் பிறப்புச் சான்றிதழில் மாற்றம்

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை

by Staff Writer 19-02-2019 | 1:34 PM
Colombo (News 1st) சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என் சி ச்சத்துர விதானகே குறிப்பிட்டுள்ளார். புதிய பிறப்புச் சான்றிதழ் விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. அத்துடன், தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.