கபில நிஷாந்த டி சில்வாவுக்கு விளக்கமறியல்

தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல்

by Staff Writer 19-02-2019 | 1:40 PM
Colombo (News 1st) காலி - ரத்கம பகுதியில் இருவர் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி - ரத்கம பகுதியில் இருவர் காணாமல் போனமை தொடர்பில், தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டார். குறித்த இருவரையும் கடத்திச் சென்று காணாமலாக்கியதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி காணாமல்போன குறித்த இருவர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்