டேம் வீதி துப்பாக்கிச் சூடு: சந்தேகநபரான ரைனா கைது

டேம் வீதித் துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபரான ரைனா கைது

by Staff Writer 19-02-2019 | 7:18 AM
Colombo (News 1st) கொழும்பு - டேம் வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவரான வாழைத்தோட்டம் தினுக்க என்பவருடன் நெருங்கிய தொடர்புள்ள ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். ரைனா என அழைக்கப்படும் திசாநாயக்க ஷனிது ஷனில்க சங்கல்ப என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் ஹெரோயின் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 24 வயதான குறித்த சந்தேகநபர் சூரியமல்புற குமாரதொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.