சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 19-02-2019 | 8:52 AM
Colombo (News 1st) கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 2,40,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இந்தத் தடவை இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.