கொழும்பில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

by Staff Writer 19-02-2019 | 3:34 PM
Colombo (News 1st) கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது. கொழும்பு - ஹூணுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம் பெரஹெராவில் இன்று இரவு வீதியுலா இடம்பெறவுள்ளது. இன்று இரவு 7.30 அளவில் வீதியுலா இடம்பெறவுள்ளதுடன், இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜேம்ஸ் பீரிஸ், கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.