இன்று சுப்பர் மூனைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம்

இன்று சுப்பர் மூனைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம்

by Staff Writer 19-02-2019 | 1:49 PM
Colombo (News 1st) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம் இன்று இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்று இரவு சந்திரன் வழமையை விட 6 வீதம் பெரிதாகவும் 14 வீதம் பிரகாசமாகவும் காணப்படும் என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பீட ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி சந்திரனை சிறியளவில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளதாக, பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் கூறியுள்ளார்.