பதற்றத்தைக் குறைப்பது தான் நோக்கம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் நோக்கம்: சவுதி தெரிவிப்பு

by Bella Dalima 19-02-2019 | 4:23 PM
Colombo (News 1st) இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் தமது நோக்கம் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டிருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்தின் பின்னர் பாகிஸ்தான் சென்றடைந்தார். இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், ஒரு 150,000 கோடி ரூபா மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான் அழைத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து இஸ்லாமபாத்தில் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர்,
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தான் எங்களுடைய நோக்கம். இரண்டு அயல் நாடுகளுக்குள்ளும் நிலவும் வேறுபாட்டை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பாதையை எதிர்நோக்கியுள்ளோம்
என குறிப்பிட்டுள்ளார்.