வரி மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

வரி மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 18-02-2019 | 6:43 PM
Colombo (News 1st) சுமார் 57 மில்லியன் பெறுமதியான பீடி இலையை நாட்டுக்குக் கொண்டுவந்து 45 மில்லியன் ரூபா வரி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புதுக்கடை நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். சந்தேகநபர் கோட்டைப் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் இன்று விடயங்களை முன்வைத்த பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து அவற்றை இத்தாலிக்கு அனுப்பும் தோரணையில் பீடி இலைகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னர் சந்தேகநபர்கள் பீடி இலைகளுடன் கொள்கலனை சுங்கத்திலிருந்து வௌியே கொண்டுவர முயற்சித்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் கடமை நேர ஊடகப்பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.