by Staff Writer 18-02-2019 | 7:21 PM
Colombo (News 1st) மாரவில - மஹவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று மஹவெவ பகுதியில் விபத்துக்குள்ளானதில், மூவர் உயிழிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தனர்.
பஸ்ஸின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பஸ் வீதியை விட்டு விலகி மின்மாற்றியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ்ஸின் சாரதி விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 33 வயதுடைய பஸ்ஸின் சாரதி அநுராதபுரத்தைச் சேர்ந்தவராவார்.