நவம் பெரஹராவை முன்னிட்டு மாற்றுவீதி நடைமுறை

நவம் பெரஹராவை முன்னிட்டு மாற்றுவீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 18-02-2019 | 6:33 PM
Colombo (News 1st) ஜேம்ஸ் பீரிஸ், கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரையில் இன்றிரவு 7.00 மணி முதல் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்காராம விகாரையில் இடம்பெறும் நவம் பெரஹர காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பெரஹர நிறைவடையும் வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.