அமல், நதீமால் அடுத்து நடப்பது என்ன

அமல், நதீமால் அடுத்து நடப்பது என்ன

by Fazlullah Mubarak 18-02-2019 | 1:44 PM

துபாயில் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேராவிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அந்நாட்டின் குற்றவியல் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தேகநபர்களின் மருத்துவ அறிக்கையை அடிப்படையாக கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் தொட​ர்புகளை பேணிய மேலும் சில பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின், திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளன. மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், பாதாள குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.