மாகந்துரே மதூஷுடன் தொடர்புகளை பேணியவர்கள் கைது

மாகந்துரே மதூஷுடன் தொடர்புகளை பேணியவர்களை கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 17-02-2019 | 1:08 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் தொட​ர்புகளைப் பேணிய மேலும் சில பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படையின், திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளன. மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், பாதாளக் குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளரும் அடங்குகின்றார். அவர்களிடமிருந்து ஹெரோயின், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.