வட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும்: முல்லைத்தீவில் பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 16-02-2019 | 8:56 PM
Colombo (News 1st) பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்து, அதனை இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்விலேயே பிரதமர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.