யாழில் சிறு தொழில் முனைவோருக்கான கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்

by Staff Writer 16-02-2019 | 6:23 PM
Colombo (News 1st) சிறு தொழில் முனைவோருக்கான கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய துணைத்தூதரகம் மற்றும் வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் இடம்பெறுகின்றது. "இணைந்த கைத்தொழில் கரங்கள்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட விரும்பினால் அவர்களுக்கான இயந்திரங்களை சிறப்பு ஏற்பாடுகளுடன் வழங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கோயம்புத்தூரிலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு பயிற்சியாளர்களினால் சிறு கைத்தொழில் முயற்சிக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.