நான் அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்ததாக ஞாபகமில்லை: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 16-02-2019 | 7:55 PM
Colombo (News 1st) வேயங்கொட வார இறுதி சந்தையை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது. 700 இலட்சம் ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மற்றும் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
எமது பிரதமர் இன்று பத்திரிகையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் அதற்காகத்தான் அரசியலமைப்பு கொண்டு வரப்படுகின்றது என தெரிவித்திருக்கின்றார். மஹிந்த கொண்டு வந்த மாற்றத்தை நானும் கொண்டு வந்திருக்கின்றேன் என கூறியுள்ளார். நான் அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்ததாக எனக்கு ஞாபகமில்லை. யாருக்காவது ஞாபகமிருக்கின்றதா? அது நியாயமானது எனின், அன்று அவர்களுக்கு ஒத்துழைத்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கலாமே.